Selvam

Born 2 win

OORUKKU 4 PERU (O4P)

leave a comment »

Written by selvam4win

September 10, 2011 at 1:34 pm

Cinema Kaaram Coffee – Power Star Srinivasan

leave a comment »

Written by selvam4win

September 10, 2011 at 12:45 pm

My Photo – in my room – 21 Aug, 2011

leave a comment »

Written by selvam4win

August 22, 2011 at 1:50 am

Posted in Uncategorized

வட்டியும் முதலும்: பசி – ஆனந்த விகடன் – 17/08/2011 – By – ராஜீமுருகன்

leave a comment »

ஆனந்த விகடன் – 17/08/2011 – வட்டியும் முதலும் – ராஜீமுருகன்

ஓவியங்கள்: ஹாசிப்கான்

பசிதான் மானுடத்தின் பொது மொழி!

அது… சோழ நாட்டு விவசாயியை, துபாய் ஷேக்கின் ஆறாவது மனைவியின் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க அனுப்புகிறது. மேகாலயா சப்பை மூக்குப் பெண்ணை, வடபழனி சிம்ரன்ஸ் ஆப்பம் ரெஸ்டாரென்ட்டில் தட்டு கழுவிவிடுகிறது. சில வெள்ளிகளுக்கு கடைசி விருந்தில் கர்த்தரைக் காட்டிக் கொடுக்கிறது. அஞ்சாறு வயசுத் தளிர்களை சிக்னலில் நின்று ரைம்ஸ் புத்தகம் விற்கச் சொல்கிறது. விஜய்க்கும் அஜீத்துக்கும் டூப் போட்டு, மூணாவது மாடியில் இருந்து தள்ளி, காலை உடைக்கிறது. டீச்சர் சாயலில் இருப்பவளை, செம்மொழிப் பூங்கா வாசலில் அம்பதுக்கும் நூறுக்கும் ஆள் பிடிக்க அலைக்கழிக்கிறது. உறவு வீடுகளிலேயே திருடவைக்கிறது. சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் கிட்னிக்கு ஆள் பிடிக்கவிடுகிறது.

பசி… காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்!

எங்கள் ஊரில் ஒரு தம்பதி 30 வருடங்கள் ஒரே வீட்டில் பேசிக்கொள்ளாமல், தனித்தனி அடுப்பில் சமைத்து, தனித்தனியே சாப்பிட்டு வாழ்ந்தார்கள். மூன்று பெண் பிள்ளைகளையும் ஓர் ஆண் பிள்ளையையும் கட்டிக்கொடுத்து அனுப்பிவிட்டு, இப்படி ஒரு வாழ்க்கை. ஏதோ ஒரு பசிப் பொழுதில் சாப்பாடு போட்டுவிட்டு மனைவி சொன்ன சொல்… அந்த மனுஷனுக்குத் தாங்கவில்லை. செருவாடாகச் சேர்த்துவைத்த பொம்பளை கோபம் பொசுக்கென்று அவிழந்தபோது, ஆம்பளைக்குத் தாங்கவில்லை. 30 வருடங்கள் தனித்து, பசித்து, உண்டு, உறங்கும் வாழ்க்கையை ஒரு சொல் உருவாக்கியது எப்படி?

இருவரில் கணவர்தான் முதலில் செத்துப்போனார். அவர் கருமாதியில் கறிச் சோறு சாப்பிட்டுவிட்டு கொல்லைக்குக் கை கழுவப் போகும்போது, பின்கட்டில் இலை நிரம்பிய படையல் சாப்பாட்டை வெறித்துப் பார்த்தபடி அந்த அம்மா உட்கார்ந்து இருந்ததும்… பக்கத்தில் கருப்பு-வெள்ளை புகைப்படத்தில் அவர் ஈட்டி மீசையோடு புன்னகைத்ததும்… இப்போதும் முடிவற்ற நினைவுகளை நோக்கித் தள்ளுகிறது.

பசி என்றால்… வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா? இல்லை. பசி உருவாக்கும் புன்னகையும்,

துயரமும், நன்றியும், துரோகமும், காற்றைப்போல எங்கெங்கும் நிறைந்துகிடக்கின்றன!

மானுடத்தின் பொது மொழி பசி என்றால், பசியின் மொழி எது?

பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வோர் உயிரும். “உனது பசியை நான் உண்ர்ந்துகொள்கிறேன்” என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம். ஆனாலும், ஏன் பிறர் பசியை பலர் உணர மறுக்கிறோம்?

சென்னை வந்த புதிதில் ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு ரயிலில் திரும்பினேன். அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குத் தண்டவாளம் வழியாக இருட்டில் நடக்கையில், திடீரென ஓர் உருவம் முன் வந்து நின்றது. கத்தியை எடுத்து முகத்துக்கு நேராக ஆட்டினான். “துட்ட எடு… ம்ம்…”

இருந்த 120 ரூபாயையும் எடுத்துக் கொடுத்தேன். பேக்கில் இருந்த 2 செட் பேன்ட்-சட்டை, 200 ரூபாய்க்கு வாங்கிய எலெக்ட்ரானிக் வாட்ச் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டான். “திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இரு…” என்று முதுகில் கைவைத்துத் தள்ளிவிட்டான். பயத்தில் இருந்த நான் திரும்பிக் கொஞ்ச தூரம் நடந்தபோது, அவனே கூப்பிட்டான்.

“அலோ… அலோ…”

“சத்தியமா எங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைங்க…”

“இந்தா, இதுல 20 ரூவா இருக்கு. காலைல டிபன் பண்ணிக்க… சாப்புடாம சாபம் வுட்டா, எம் பொழப்பு நாறிடும்.”

நிச்சயமாக அவன் வாழ்க்கையில் பசியை அதி தீவிரமாக உணர்ந்தவனாக இருப்பான். குடல் சுருங்கித் துடித்து ஒரு வேளை சோற்றுக்கு செத்துச் சுண்ணாம்பாகி இருப்பான்.

இப்போதும் ஒரு வேளை சாப்பாடு மட்டுமே இலக்காக, வாழ்க்கையாக எத்தனை பேர் அலைகிறார்கள். முருகன் கோயில் வாசலிலும் சாய்பாபா கோயில் திண்டிலும் சாப்பிட்டு முடித்த நிம்மதியில் எத்தனை பேர், எவ்வளவு நிம்மதியாகத் தூங்குகிறார்கள். “பாய்ஸ்” பட செந்தில் மாதிரி என்னென்ன இடங்களில் என்ன என்ன சாப்பாடு கிடைக்கும் என கேட்லாக் போட்டுக்கொண்டு எவ்வளவு பேர் வாழ்கிறார்கள். பிறந்த நாளைக்கும் கல்யாண நாளைக்கும் வசதியானவர்கள் போடும் அன்ன தானத்தில் வயிறு கழுவிக்கொள்பவர்கள் எவ்வளவு போ். கையில் காசே இல்லாத கடும் பசித் தருணங்களில், அக்கம் பக்கத்துக் கல்யாண மண்டபங்களில் கேசரியோடு டிபனோ, ஐஸ்க்ரீமோடு விருந்தோ, நானும் ருசித்தது உண்டு. வேலை செய்யும் வீட்டில் மீந்ததை முந்தியில் மறைத்துக் கொண்டுவரும் அம்மாக்களுக்காக

இன்னும் எத்தனை பிள்ளைகள் காத்திருக்கிறார்கள். இப்போதும் ஹோட்டல் வாசல்களில், சாலை ஓரங்களில் எச்சில் பொறுக்கித் தின்னும் மனிதர்களை, இயர் போனில் பேசிக்கொண்டு, எவ்வளவு இலகுவாகக் கடந்துவிடுகிறோம். பஃபே சாப்பாடுகள் கொட்டப்படும் தெருக்களில் பசியில் விழித்து இருப்பவர்கள் எத்தனை பேர்!

முன்பு திருவல்லிக்கேணி விநாயகா மேன்ஷனில் தங்கியிருந்தபோது, என் பக்கத்து ரூம்காரன் சசி. அவ்வப்போது ஏதாவது வேலை பார்ப்பான். திடுதிப்பென்று வேலை இல்லாமல், அறையிலேயே முடங்கிக்கிடப்பான். இருக்கிற காசுக்கு ரெண்டு பேருமாகப் பகிர்ந்து தின்று வாழ்ந்தோம். அங்கே இருந்து நான் வெளியேறிய சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் சசியைப் பார்க்கப் போனேன். அறையில் அழுக்குத் துணிகளுக்கு நடுவே சுருண்டு முனகிக் கிடந்தான். பதறிப்போய்த் தொட்டுப் பார்த்தால்… காய்ச்சல்.

“சசி… சசி… என்னாச்சு மாப்ள…?”

“சாப்பிடலை மச்சான்…”

“மதியம் சாப்பிடாம, அப்பிடி என்ன புடுங்கற வேலை உனக்கு…?”

“இல்லடா… மூணு நாளா சாப்பிடலை.”

எனக்கு பகீரென்றது. என் கையிலும் காசு இல்லை. ஏதோ கோபம். கழிவிரக்கம்… யாரிடமும் எதுவும் சொல்லாமல், மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறான். அவனை எழுப்பி இரவுச் சாப்பாட்டுக்குக் கொளத்தூரில் இருந்த என் அத்தை வீட்டுக்கு அழைத்துப் போனேன். அத்தை வீட்டில் சமைத்து முடித்து சாப்பிடக் கூப்பிடும் போது, “பரவாயில்லைங்க… போகும்போது பார்த்துக்குறோம்” என நெளிந்த சசியை இலையை நோக்கி நெட்டித் தள்ளினேன். சாப்பாடு, கூட்டு, பொரியல் என இலை முழுக்கச் சாப்பாடு. உட்கார்ந்து ஒரு வாய் அள்ளிவைத்தவன் கரகரவென அழ ஆரம்பித்துவிட்டான். எதுவும் புரியாமல் அத்தை பதற, தடாலென எழுந்து வெளியே ஓடி விட்டான். நான் பின்னாலேயே துரத்தி வந்தால், ரெட்டேரி பாலத்தில் நின்று தேம்பித் தேம்பி அழுகிறான்.

“வேணாம் மச்சான்… நா கௌம்பறேன். எனக்கு என்னவோ மாதிரியிருக்கு…”

“லூஸீப் பயயே… என்னாச்சுரா?”

“முதல்ல என்னை விடுறா…”

அத்தை வீட்டில் இருந்து கேரியரில் சாப்பாடு எடுத்து வந்து, மேன்ஷனில் அவனைச் சாப்பிடவைத்துவிட்டு வந்தேன். அந்த ஒரு வாய் சாப்பாடு அவனுக்கு… அம்மாவை, அப்பாவை, ஊரை, காதலியை, இழந்ததை, தவறுகளை, லட்சியத்தை… எதையெதையோ நினைவுபடுத்திவிட்டது. பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும்விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான்… ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!

அதன் பிறகு, பெரிய நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாகச் சேர்ந்து எனக்கும் இன்னும் பலருக்கும் சில பல வருடங்களுக்கு சசிதான் சாப்பாடு போட்டான். இப்போது ஃபேஸ்புக் போட்டோவில் நியூஜெர்ஸியில் ஜெர்கினுடன் கார் ஓட்டியபடி சிரிக்கிறான்!

போன வருடம் தஞ்சாவூர் போயிருந்த போது, திலகர் திடலில் சர்க்கஸ் போட்டு இருந்தார்கள். சர்க்கஸீக்கு வந்திருந்த ஒட்டகச் சிவங்சி குட்டி ஒன்று சீரியஸாகி விட்டது. மாட்டு டாக்டரான நண்பனுடன் போயிருந்தேன். அந்த ஒட்டகச் சிவிங்கி மூக்கில் திரவமாக வழிய, சாவதற்காகவே படைக்கப்படும் செகண்ட் ஹீரோயின் மாதிரி கிடந்தது. சர்க்கஸ் முதலாளி பதற்றமாகப் பேசினார்.

“எவ்வளவோ சொன்னேன் சார். புரியாத பிரியாணில்லாம் வேணாம் வேணாம்னு… எம் பையன், அவன் ஒரு பிராந்து… சர்க்கஸை வளர்க்குறேனு இதுகளைக் கொண்டாந்தன். அம்மே, குட்டி ரெண்டையும் கொண்டாந்தான். இதுக என்ன சாப்புடும்… என்ன… ஏதுன்னு ஒரு மண்ணும் அறியல. புல்லு கில்லுனு என்ன போட்டாலும், மொனங்கிக்கிட்டே கெடக்கும். அம்மே ஒரு வாரத்துக்கெல்லாம் சாப்புடாமக்கொள்ளாம போய்ச் சேர்ந்துருச்சு. அது இருந்தாலாவது, இது எதாவது சாப்புடும்… இப்போ இதுக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு.”

அந்த ஒட்டகச் சிவிங்கிக் குட்டி பயங்கர பாவமாகப் பார்த்தது. அதன் கண்களில் ஏழு பிறவிகளுக்கான பசி உருண்டது. எந்த வனத்திலோ பிறந்து, இரைப்பை சுமந்து, தஞ்சாவூர் திலகர் திடலில் பசித்துக்கிடக்கும் பரிதாபத்தை அதற்கு அருளியது யார்? பசியும் ஆசையும் உயிர்களை ஒரே பாதையில் துரத்திக்கொண்டே இருப்பது ஏன்? அந்த இரவில் ஏராளமான கேள்விகள் கிளர்ந்து கொண்டே இருந்தன. இப்போது அந்த ஒட்டகச் சிவங்கி செத்துப் போய் இருக்கும். அதன் பசித்த ஆன்மா சர்க்கஸ் கம்பெனி யானைக்குள் புகுந்து, ஓனர் பையனை ஒருநாள் தூக்கிப் போட்டு மிதிக்கவும் கூடும்!

ஒரு வகையில், இன்றும் இவ்வுலகம் ஒரு சர்க்கஸ் கூடாரமாகவும் எளிய மனிதர்கள் ஒட்டகச் சிவிங்கிகளாகவும்தானே இருக்கிறார்கள்?

சோமாலியாவில் பசியால் சாகக்கிடக்கும் குழந்தையைத் தின்னக் காத்து இருக்கும் கழுகுக் காட்சியைப் புகைப்படம் எடுத்தவர், அந்தக் குற்ற உணர்விலேயே மன நலம் தவறித் தற்கொலை செய்து செத்துப்போனார். இதைப் பசியின் துர்சாபம் என்று சொல்லுங்கள்.

உலகின் ஆதி இனம்… விதைத்து, அறுத்து, உழைத்துத் தின்னும் கலாசாரத்தை உருவாக்கிய இனத்தை… முள் வேலி முகாம்களில், வதைக் கூடங்களில், நிலம் இழந்த துயரப் பரப்புகளில், பசியின் உதிரம் பெருகப் பெருக அலையவிட்ட வரலாற்றை எந்தச் சாபம் தண்டிக்கப்போகிறது?

“உங்கள் நண்பன்… உங்கள் சொந்தக்காரன்” என ராஜபக்ஷேவின் புகைப்படம் போடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டிக்கிடக்கும் யாழ் மண்ணில், இன்று பசியையும் வலியையும் தவிர, எதுவும் இல்லை. ஒருவேளை உணவுக்காக, திருட்டையும் விபசாரத்தையும் ஒரு வாழ்நிலத்தில் பரப்புகிறது அதிகார வர்க்கம்.

எனில், அதிகாரத்திற்கு எளியவர்களின் பசிதான் எப்போதுமே சாப்பாடு. ஆனால் தாய் முலை இழந்த ஒரு சிறுபிள்ளையின் பசி தீரவே தீராது. அது அதிகாரத்தை என்றேனும் ஒருநாள், கொன்று தின்றுதான் தன் பசியைத் தீர்த்துக்கொள்ளும் அதிகாரமே… அதனிடம் இருந்து நீ தப்பவே முடியாது!

ஒரு ரெஸ்டாரென்டில் சாப்பிடும் போது பக்கத்து டேபிளில் சாப்பிட்டு முடித்த ஒரு குடும்பம் சர்வரைக் கூப்பிட்டு “டாக் பார்சல்” என்றது.

அப்போதுதான் நான் அந்த வார்த்தையையே கேள்விப்பட்டேன். சாப்பிட்டு முடித்து மீதி இருந்தால் வீட்டில் உள்ள நாய்களுக்காம்… “டாக் பார்சல்”.

கொடுத்துவைத்த நாய்கள்.

இதைப் பார்த்துக்கொண்டு இருந்த நான், “ரெண்டு முட்டை பரோட்டா… லயன் பார்சல் பண்ணியிருங்கண்ணே…” என்றேன்.

“என்னங்க? லயன் பார்சலா?”

“ஆமா… என் ரூம்ய ரெண்டு சிங்கம் சாப்பிடாமக் கெடக்கு!”

Written by selvam4win

August 22, 2011 at 1:28 am

அலுவலகத்தில் மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க…

leave a comment »

1.தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

2.அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்

3.எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசுக்காகக் கையாளுங்கள்

4.சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

5.நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.

6.குறுகிய மன்ப்பான்மையை விட்டொழிங்கள்.

7.உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டுவிடுங்கள்.

8.மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

9.அளவுக்கதிமாக தேவைக்கதியமாய் ஆசைப்படாதீர்கள்.

10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவ்ர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

11.கேள்விப்படுகிற எல்லா விஷ்யங்களையும் நம்பி விடாதீர்கள்.

12.அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

13.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

14.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

15.மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

16.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

17.பேச்சிலும் நடத்தையிலும் திமிர் தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவித்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

18.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.

19.பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

20.தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை,அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

Written by selvam4win

August 9, 2011 at 11:48 pm

Posted in Life, Office

Waka Waka (This Time for Africa) (The Official 2010 FIFA)

leave a comment »

Written by selvam4win

August 1, 2011 at 11:53 pm

ஆனந்த விகடன் – அனிலாடும் முன்றில் – நா.முத்துக்குமார் – 06-07-2011

leave a comment »

Downloadable link: http://tinyurl.com/vikatan-son


ஆனந்த விகடன் – அனிலாடும் முன்றில் – நா.முத்துக்குமார் – 06-07-2011

 

மகன்

அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.

வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே, சிறு வயதில் தன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், தாயுடன் சென்று மகாகவி தாகூரை,  அவர் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் சந்தித்து ஆசி பெறுவார். ஒரு முறை அப்படி வாழ்த்து பெற சந்திக்கையில், தாகூர் அவரிடம் ஒரு கவிதையை எழுதிக்கொடுத்தார். அந்தக் கவிதை…

நான் உலகத்தின் பல நாடுகளுக்குச்

சென்று வந்திருக்கிறேன்

இந்த உலகில் உள்ள

மாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள்

எல்லாவற்றிலும் என் பாதம் பட்டிருக்கிறது.

ஆனால் என் மகனே

என் வீட்டுத் தொட்டத்திலுள்ள

புல்லின் நுனியில் உறங்கும்

பனித் துளியை மட்டும்

பார்க்கத் தவறிவிட்டேன்.

கவிதையைக் கொடுத்துவிட்டு சத்யஜித்ரேவிடம் தாகூர் சொன்னார். “இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது இப்போது இந்தச் சிறு வயதில் உனக்குப் புரியாது. வளர்ந்த பின் எடுத்துப் படித்துப் பார். புரிந்தாலும் புரியாலும்.”

வருடங்களுக்குப் பிறகு அந்தக் கவிதையை மீண்டும் படித்த சத்யஜித்ரே, அதன் அக தரிசனத்தை உணர்ந்து “பதேர் பாஞ்சாலி” படம் எடுத்தார்.

என் அன்பு மகனே! உனக்கும் இதையே தான் சொல்கிறேன். பின் நாட்களில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப் பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.

என் பிரியத்துக்குரிய பூக்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க… மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. “தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்” என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கை விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசிர்வதித்தாய்.

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.

என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரி்க்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தததித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார்.

எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. என் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு.

உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில்தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம்.

இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய்.

இதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் வீட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும். அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. அந்தக் கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்க கோடைக் காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.

வயதில் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் என் கனவுகளை ஆசிர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் எதிராகும். என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.

நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்துவைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்.

இப்படிக்கு,

உன் அன்பு அப்பா.

Written by selvam4win

August 1, 2011 at 7:32 am

“DeivaThirumagal” Best Acting by VIKRAM & SARA

leave a comment »

Written by selvam4win

July 20, 2011 at 4:41 am

Posted in Life, Thought, Web

Tagged with , , , ,

Nokia chinna pin charger

leave a comment »

A girl ran from home with her boy friend…

The whole family was depressed and she came after three days :(

Dad (with sad and angry): ippo ethuku vandha enna venum unaku…

 

 

 

 

 

 

Girl: nokia chinna pin charger…

Written by selvam4win

June 30, 2011 at 2:04 am

The Will To Win

leave a comment »

The Will To Win

If you want a thing bad enough
To go out and fight for it,
Work day and night for it,
Give up your time and your peace and
your sleep for it

If only desire of it
Makes you quite mad enough
Never to tire of it,
Makes you hold all other things tawdry
and cheap for it

If life seems all empty and useless without it
And all that you scheme and you dream is about it,

If gladly you’ll sweat for it,
Fret for it, Plan for it,
Lose all your terror of God or man for it,

If you’ll simply go after that thing that you want.
With all your capacity,
Strength and sagacity,
Faith, hope and confidence, stern pertinacity,

If neither cold poverty, famished and gaunt,
Nor sickness nor pain
Of body or brain
Can turn you away from the thing that you want,

If dogged and grim you besiege and beset it,
You’ll get it!

– By Berton Braley

Written by selvam4win

June 29, 2011 at 8:45 am

Posted in Life, Motivational, Thought, Web

Follow

Get every new post delivered to your Inbox.